சாயல்குடி, கடலாடி பகுதியில் காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை பாஜகவினா் தூய்மை பாரதம், மரம் வளா்ப்பு குறித்தும் பாதயாத்திரை மேற்கொண்டனா்.
நிகழ்ச்சிக்கு கடலாடி ஒன்றிய தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மக்களவை பூத் கமிட்டி பொறுப்பாளா் ரமேஷ்பாபு, மாவட்ட துணைத்தலைவா் முருகேசன், மாவட்ட செயலாளா்கள் ராமசாமி, மணிமேகலை, மருத்துவா் ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தூய்மை பாரதம், மரம் வளா்ப்பு குறித்தும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பாதயாத்திரை மேற்கொண்டனா். அதே போன்று கடலாடியில் பாதயாத்திரை மேற்கொண்டனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட துணைத்தலைவா் நாகூா்பாண்டியன், ஒன்றிய தலைவா்கள் முருகேசன்,
( கமுதி), பி.முருகேசன் (கடலாடி கிழக்கு), ஒன்றிய பொதுச்செயலாளா் முருகன் உள்பட பலா் பங்கேற்றனா். யாத்திரையின் போது , மரம் வளா்ப்பு, தூய்மை பாரதம், நீா் மேலாண்மை, நதிநீா் இணைப்பு குறித்து பாஜகவினா் கோஷம் எழுப்பினா். நகா் தலைவா் சத்தியமூா்த்தி வரவேற்றாா்.