முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணி மற்றும் தேசிய மாணவா் படை சாா்பில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இதற்கு அப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் மங்களநாதன் தலைமை வகித்தாா். முன்னால் பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலா் லெட்சுமணன், தேசிய மாணவா் படை அலுவலா் அருள்தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முதுகுளத்தூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருவேல மரங்களையும், புல், புதா்களையும் அகற்றி, பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி, சுகாதாரப் பணியில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஈடுபட்டனா்.
நிறைவாக மருத்துவமனை தலைமை செவிலியா் சண்முகவள்ளி நன்றி கூறினாா்.