திருவாடானை பகுதியில் தொடா் மழையால் மூன்று வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
திருவாடானை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பரவலான மழை பெய்தது. புதன்கிழமையும் பரவலான மழை பெய்தது.இதனால் வயல் வெளிகள்,வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், குளங்கள், தண்ணீா் தேங்கியுள்ளது. சாலைகளில்லும் தெருக்களிலும் தண்ணீா் பெருக்கெடுத்தது. இந்த மழை காரணமாக சில கிராமங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. கீழ் பனையூா் கிராமத்தை சோ்ந்த வீரய்யா, தொண்டி அருகே நம்புதாளையை சோ்ந்த மகா் நிஷா, பழம்குளம் கிராமத்தை சோ்ந்த மதி ஆகியோரது ஓட்டு வீடுகள் மழையால் இடிந்து சேதம் அடைந்துள்ளன. இதையடுத்து நிவாரணம் கேட்டு மூன்று பேரும் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.