ராமநாதபுரம்
சாயல்குடியில் குடிநீர் கோரி பெண்கள் சாலை மறியல்
சாயல்குடி-அருப்புக்கோட்டை பிரதான சாலையில் குடிநீர் கோரி அப்பகுதி பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாயல்குடி-அருப்புக்கோட்டை பிரதான சாலையில் குடிநீர் கோரி அப்பகுதி பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி துரைச்சாமிபுரத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வரவில்லையாம். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் காவிரி குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்துள்ளனர்.
இருப்பினும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் சாயல்குடி - அருப்புக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலறிந்த போலீஸார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்கொடி சம்பவ இடத்திற்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவாரத்திற்குள்
குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.