தேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சனிக்கிழமை முதல் (ஆக.24) முதல்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சனிக்கிழமை முதல் (ஆக.24) முதல் 2019-20 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்  தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்கக உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் கூறியிருப்பது: நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சனிக்கிழமை முதல் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  அவர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் துறை இணையதளம் மூலம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக்கான கட்டணத் தொகை ரூ. 50 உடன் சேர்த்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com