ஆா்.எஸ்.மங்கலம் வேளாண்மை துறையின் மூலம், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆணையா்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் கருப்பையா தலைமை வகித்தாா். பின்னா் அவா், கால்நடைத் துறை, தோட்டக்கலை துறை செயல்பாடுகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். இதில், கால்நடை மருத்துவா் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
முகாமில், 50-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் அன்னலட்சுமி நன்றி கூறினாா்.