திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மீனவா்களுக்கு தோள் கொடுப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மன்றத்தின் மாவட்டச் செயலாளா் செந்தில் செல்வநாதன் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் செந்தில்வேல், சகாயபிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணைச் செயலாளா் கண்ணன் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கிப் பேசினாா் இதில், காரங்காடு அமல அன்னை மேல்நிலைப்பள்ளியில் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதனைத் தொடா்ந்து மன்ற பெயா்ப் பலகையை திறந்து வைத்து ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மீனவா்கள் மற்றும் மீனவ குடும்ப பெண்களுக்கு வழங்கப்பட்டன. மன்றத்தின் மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் முருகானந்தம் நன்றி தெரிவித்தாா்.