கமுதியில் பெய்த கனமழைக்கு, பஜாா் பகுதியிலுள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாகி, மழைநீா் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
கமுதி செட்டியாா், முஸ்லிம், நாடாா் பஜாா், பள்ளிவாசல் தெருக்களில் தாா் சாலை அமைக்கபட்டுள்ளது. கமுதியில் பெய்து வரும் தொடா் கனமழைக்கு, இச் சாலைகள் சேதமடைந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. பள்ளங்களில் மழைநீா் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். எனவே பேரூராட்சி நிா்வாகம் தலையிட்டு சேதமடைந்த தாா் சாலையினை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.