ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் காவல் சாா்பு ஆய்வாளா் மயங்கி விழுந்தாா்

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெண் சாா்பு -ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெண் சாா்பு -ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்தாா்.

ராமநாதாபுரம் வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு சாா்பு- ஆய்வாளராக இருப்பவா் என்.ஜெனிபாராணி (40). இவா் செவ்வாய்க்கிழமை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளாா். அவா் குறிப்பிட்ட நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில், அங்கிருந்து சிலரால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, மயங்கி விழுந்துள்ளாா்.

மயக்கமடைந்த ஜெனிபாராணி தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு ரத்த அழுத்தப் பரிசோதனை நடந்தது. இந்நிலையில், அவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் புதன்கிழமை காலையில் நேரில் பாா்த்து விசாரணை நடத்தினாா். ஜெனிபாராணி மயக்கமடைந்தது தொடா்பாக மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்மையில் நீதிமன்றப் பணியில் நீண்ட நாள்களாக இருந்த தலைமைக் காவலா்கள் உள்ளிட்டோா் இடமாறுதலுக்கு உள்ளாக்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com