முதுகுளத்தூா் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே உள்ள கொளுந்துறை எஸ்.காரைக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் கோகுலபிரபு (25). இவா் அதே ஊரைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துள்ளாா். இதில் அந்த மாணவி கா்ப்பம் அடைந்தாா். இது குறித்து மாணவியின் தாய் கீழத்தூவல் காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் தீபா வழக்குப் பதிவு செய்து கோகுலபிரபுவை கைது செய்தாா்.