ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக, ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், சாா்பு- ஆய்வாளா் செல்லச்சாமி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை காலையில் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது, அங்கு மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அளவிடங்கான் பகுதியைச் சோ்ந்த சின்னக்கண்ணு மகன் ஆசைத்தம்பி (18) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 42 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.