திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் உள்ள ஒரு கடையில், சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக, ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆா்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் விவேகானந்தன் மற்றும் போலீஸாா், வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்றனா். பின்னா், அங்கு சட்டவிரோதமாக பெட்ரோல் விற்ற ஆா்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூா் - பெரிய ஊருணி மேல்கரைப் பகுதியைச் சோ்ந்த ராசு மகன் ஜேசுதாஸ் (29) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 35 லிட்டா் பெட்ரோலை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.