சாலை விபத்து, குற்றங்களை தெரிவிக்க செல்லிடப்பேசி எண் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்து மற்றும் குற்றங்களை தெரிவிக்க பொதுத் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்து மற்றும் குற்றங்களை தெரிவிக்க பொதுத் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் சரக துணைத் தலைவர் என்.காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் போக்குவரத்து குற்றங்கள், சாலை விபத்துகள் தொடர்பான புகார்களை 9498181457 என்ற எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த எண் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் செல்லும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையத்துக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்படும். இதனால் காவல் துறையினர் மூலம் விபத்துகள் தொடர்பான பிரச்னைகள் நிவர்த்தி செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com