ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று தொடக்கம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்குகிறது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்குகிறது.
  மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரி, 5 ஆம் தேதி சுவாமி, அம்பாள் தேரோட்டம், 6 ஆம் தேதி மாசி மகா அமாவாசை அன்று மதியம் 1.35 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் வைபவம் நடைபெறுகிறது. 
     இதனால், அன்று பகல் 1.35 மணி முதல் கோயில் நடை அடைக்கப்படும். இரவு 8 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். திருவிழாவை முன்னிட்டு, தெற்று நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
 இத்தகவலை கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்க்கரசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com