தேவகோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருட்டு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸார்


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவகோட்டை காந்தி வீதியைச் சேர்ந்தவர் ஹசன் மைதீன் (55). இவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரஷிதா பானு, தேவகோட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஒத்தக்கடையில் உள்ள ரசீதா பானுவின் தந்தை உயிரிழந்ததால் அங்கு சென்று விட்டார் . அவர் சனிக்கிழமை காலை திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிச்சியடைந்தார். அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 16 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ரஷீதாபானு அளித்தப்புகாரின் பேரில் தேவகோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com