திருவாடானை அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
பண்ணவயல் அத்தாணி கண்மாய் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பதாக புதன்கிழமை தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்துக்கு திருவாடானை போலீஸார் சென்றனர். அப்போது அங்கு சிவகங்கை மாவட்டம் வடக்கு விசவனூர் கிராமத்தை சேர்ந்த சதீஸ் (25) என்பவர் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்துள்ளது. உடனடியாக சதீஸை கைது செய்து அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களையும் ரூ.200-ஐயும் பறிமுதல் செய்து பின்னர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.