ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வியாழக்கிழமை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவை அதிமுக  மற்றும் அமமுக வினர் கொண்டாடினர். 

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வியாழக்கிழமை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவை அதிமுக  மற்றும் அமமுக வினர் கொண்டாடினர். 
மானாமதுரை நகர் பகுதி மற்றும் ஒன்றியத்திலுள்ள கிராமங்களில் அதிமுகவினர் மற்றும் அமமுக வினர் தனித்தனியாக எம்.ஜி.ஆர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்புவனம், இளையான்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இந்த இரு கட்சியினரும் எம்.ஜி.ஆரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
முதுகுளத்தூரில்... காந்திசிலை அருகில், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அருகில் உள்ள எம்.ஜி.ஆர் முழு உருவசிலை ஆகிய இடங்களில் அவரது உருவ படங்களுக்கும், உருவ சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் மலைக்கண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கே.கர்ணன், நகர் அவைத் தலைவர் வி.கருப்பசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் மோகன்தாஸ்,நகர்  தலைவர் காட்டுராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாயல்குடியில்... நடைபெற்ற விழாவுக்கு  ஒன்றியச் செயலாளர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் எம்.செய்யது காதர், ஒன்றிய துணைச் செயலாளர் வி.கே.செந்தூர்பாண்டி, நகரச் செயலாளர் சுப்பிரமணியம், கூட்டுறவு சங்கத் தலைவர் முகம்மது ரபீக், நகரத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கடலாடியில்...  பேருந்து நிலையம் அருகில் உள்ள  எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கு கடலாடி ஒன்றியச் செயலாளர் என்.கே.முனியசாமிபாண்டியன்  தலைமை வகித்தார். அவைத் தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய இளைஞரணி தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய குழு துணைத் தலைவர் பத்மநாதன், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் ராமமூர்த்தி, நகர செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரமக்குடியில்...  பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவுக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சோமாத்தூர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் எம்.நாகராஜன், ஜெ பேரவை நகர் செயலாளர் எம்.வடமலையான், வழக்குரைஞர் செந்தில்குமார், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஐ.வின்சென்ட்ராஜா, சிறுபான்மைப் பிரிவு மாவட்ட பொருளாளர் கே.அப்துல்மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கமுதியில்... பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.காளிமுத்து தலைமையில், எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் பூமிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் சேகரன், இணை செயலாளர் கிருஷ்ணன், புத்துருத்தி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் டி.நாகராஜ்,  ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்றச் செயலாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அ.ம.மு.க., சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.கே.ஜி. முத்துராமலிங்கம் தலைமையிலும், தெற்கு ஒன்றியச் செயலாளர் முத்து, பசும்பொன் முன்னாள் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலையிலும் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஜெ. பேரவை ஒன்றியச் செயலர் எஸ்.பி.ரவி, முஷ்டக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி, ஜெ. பேரவை ஒன்றியப் பொருளாளர் சரவணன் விஜயபாண்டி, முத்துமீரா, முன்னாள் கமுதி ஒன்றிய அவைத் தலைவர் ராமையாதேவர், சுபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அபிராமம்... பேருந்து நிலையத்தில் அ.ம.மு.க.,  சார்பில் பேரூராட்சி முன்னாள் தலைவர் குமணன் தலைமையிலும், மாநில மருத்துவரணி இணை செயலாளர் கபிலன் முன்னிலையிலும், எம்.ஜி.ஆர்., உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தபட்டது. 
தேவகோட்டையில்...  அதிமுக சார்பில் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், முன்னாள் நகர் மன்றத் துணைத் தலைவர் கா.சுந்தரலிங்கம், நகரச் செயலாளர் எஸ்.வி.ராமச்சந்திரன், அரசுவழக்கறிஞர் இராமநாதன், பிர்லா கணேசன், புதுகுறிச்சி நடராஜன், லக்கிகார்த்திக், வழக்கறிஞர் வி.எம். ஆசைத்தம்பி உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர்.படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தேவகோட்டை பேருந்துநிலையம்  அருகில்  அமமுக சார்பில் மாநில இளைஞர்  அணி இணைச் செயலாளர் இரவுசேரி முருகன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இதில்  நகரச் செயலாளர் வழக்குரைஞர் எஸ். கமலக்கண்ணன், இரவுசேரிகுமார், டி.எஸ்.கே. செல்வம், தில்லைராஜன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com