ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் 2018-19-ம் ஆண்டுக்கான சாதனை விளக்க கையேடு சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கொ. வீரராகவராவ் தலைமை வகித்தார். இதில் வங்கியின் தூத்துக்குடி மண்டல இயக்குநர் விஸ்வநாதன், நபார்டு வங்கி இயக்குநர் மதியழகன் மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் சங்கரன், பயிற்சித் திட்ட இயக்குநர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியரால் சாதனை விளக்கக் கையேடு வெளியிடப்பட்டது.