கமுதி அருகே சனிக்கிழமை பலத்த மழை பெய்த போது, மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்தது.
கமுதி அருகே அபிராமம் பகுதியில் சனிக்கிழமை மதியம் சூறைக் காற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த மழைக்கு அபிராமம் நத்தத்தில் ஆழ்வார் அப்பன் (40) என்பவருக்குச் சொந்தமான பசுமாடு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. வருவாய்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.