ராமநாதபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ' சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (40) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவியின் தாயார், ராமநாதபுரம் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸார் கணேசனை வெள்ளிக்கிழமை போக்ஸோ' சட்டத்தில் கைது செய்தனர்.