ராமேசுவரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 5 ஆம் ஆண்டாக வியாழக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழுதுகள் அறக்கட்டளை தலைவர் இரா.மோகன் கருத்துரை வழங்கினார். மாணவர்களுக்கு கேடயம் மற்றும் ரொக்கப் பரிசுகளை சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வழங்கினார். நிகழ்ச்சியில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.மகேஷ், வட்டாட்சியர் எம்.அப்துல்ஜபார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இரா.கருணாகரன், வர்த்தக சங்கத்தலைவர் சந்திரன், விழுதுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் துரைராஜ், உமாசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.