முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் காயமடைந்தார். 

முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் காயமடைந்தார். 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் கருப்பசாமி (24), அதே கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் சதீஷ் (30). இவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பரமக்குடியிலிருந்து கீழத்தூவல் கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தனர். கீழத்தூவல் அருகே வந்தபோது, வளைவில் திரும்பிய போது நிலைதடுமாறி இருவரும் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சதீஷ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கீழத்தூவல் போலீஸார் வழக்குப் பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com