ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி புதிய வட்டாட்சியராக முத்துக்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
ஏற்கெனவே கடலாடியில் வட்டாட்சியராக பணியாற்றிய பரமேஸ்வரன் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலைத்துறை (எண். 49) வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக பரமக்குடியில் வட்டாட்சியராக பணியாற்றி வந்த முத்துக்குமார் கடலாடி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.