ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறையின் 12 ஆவது பட்டாலியன் காவலர்களுக்கு குடியிருப்புக்கான கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறையில் 12 ஆவது பட்டாலியன் காவலர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக, சக்கரக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட 79 ஏக்கர் இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு காவலர் குடியிருப்பு முதன்மைப் பொறியாளர் தென்னரசு, தெற்கு மண்டலக் கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், மதுரை மண்டலச் செயற் பொறியாளர் ஜெயக்குமார், உதவிச் செயற்பொறியாளர் சங்கர், உதவிப் பொறியாளர் ஞானவேல் மற்றும் 12 ஆவது பட்டாலியன் கமான்டெண்ட் சிதம்பரம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சுமார் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 3 பிளாக் காவலர் குடியிருப்பு, அலுவலகம் மற்றும் ஆயுதங்கள் வைக்கும் அறைகளுடன் கட்டப்பட உள்ளதாக, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.