திருவாடானையில் வாகனச் சோதனையில் ரூ.2.27 லட்சம் பறிமுதல்

திருவாடானை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் இருவரிடம் இருந்து ரூ.2.27 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 

திருவாடானை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் இருவரிடம் இருந்து ரூ.2.27 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 
திருவாடானை அருகே ஆர். எஸ். மங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். 
இதில் எம்.கணேசன் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.79,500 -ஐ பறிமுதல் செய்தனர். அதே போல் எஸ்.பி.பட்டிணம் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கதிரசேன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாகச் சென்ற மூக்கையூரைச் சேர்ந்த மீன் வியாபாரி வேல்முருகன் என்பவரிடம் இருந்து ரூ.1,48,150- ஐ பறிமுதல் செய்தனர். 
இருவரிடமும் பறிமுதல் செய்த ரூ.2,27,650-யை கருவூலத்தில் தேர்தல் அதிகாரி கள் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com