மணல் கடத்தல்: இருவர் கைது

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் மணல் கடத்தியதாக 2 பேரை போலீஸார் வழக்குப் பதிந்து இரு மாட்டு வண்டிகளை பறிமுதல்செய்து

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் மணல் கடத்தியதாக 2 பேரை போலீஸார் வழக்குப் பதிந்து இரு மாட்டு வண்டிகளை பறிமுதல்செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பாலைக்குடி அருகே உப்பூர் அனல் மின் நிலையம் பின்புறம் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் அழகுராஜா புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு  சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு கோவிந்தன் (65), அடர்ந்தனக்கோட்டையைச் சேர்ந்த நாகசாமி (65) ஆகிய இருவரும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவது தெரியவந்துள்ளது. உடனடியாக இருவரையும் கைது செய்த போலீஸார் மாட்டு வண்டிகள் இரண்டையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com