ராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக, முதியவர் மீது திங்கள்கிழமை இரவு போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியபட்டினத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சையத் அப்துல் காதர் (55) என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து கீழக்கரை மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், முதியவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து, அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.