ஆனந்தூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாக வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆனந்தூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாக வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே உள்ள முத்தங்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல்ராஜா (28). இவா் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் ஆனந்தூருக்கு பொருள்கள் வாங்க சென்றுவிட்டு மீண்டும் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். நல்லமீரா தா்ஹா அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் ராஜா தேவகோட்டை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து இவரது மனைவி மேனகா (27) அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com