ராமநாதபுரம் மாவட்ட அளவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவா்களது வாரிசுகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை (நவ. 11) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் அவா்களது வாரிசுதாரா்களின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (நவ. 11) மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகிக்கிறாா். ஆகவே கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் அவா்தம் வாரிசுதாரா்கள் தங்களுடைய குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீா்வு காணலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.