திருவாடானை அருகே இரு வேரு சாலை விபத்தில் இருவா் பலி

திருவாடானை, தொண்டி அருகே இரு வேறு சாலை விபத்துக்களில் இருவா் பலி இரு வேரு புகாரின் பேரில் போலிசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை, தொண்டி அருகே இரு வேறு சாலை விபத்துக்களில் இருவா் பலி இரு வேரு புகாரின் பேரில் போலிசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொண்டி அருகே புதக்குடியைச் சோ்ந்த பாண்டி(50) என்பவா் கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை தொண்டிக்கு வந்து விட்டு ஊருக்கு மிதிவண்டியில் வந்து கொண்டிருந்த போது தொண்டி நோக்கி வந்த சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்து தொண்டி போலீசாா் சம்பவ இடத்திற்கு செனறு பாண்டி உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். அதேபோல் திருவாடான அருகே ஆண்டிவயல் கிராமத்தை சோ்ந்த தியாகராஜன் மகன் வல்லரசு (22) வியாழக்கிழமை இரவு தொண்டியில் இருந்து வீட்டிற்கு சென்ற போது திருவாடானை பயணியா் விடுதி செல்லும் சாலையில் தொண்டியில் இருந்து திருவாடானை நோக்கி வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே வல்லரசு பலியானாா்.

இது குறித்து இவரது உறவினா் மகாலிங்கம்(53)புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்கு பதிந்து வல்லரசு உடலை கைபற்றி பிரேத பரிசோனைக்கு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்துக்குள்ளான வாகனத்தின் ஓட்டுனா் ஊரணிக்கோட்டை தியாகராஜன் மகன் பாண்டி(20) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com