சாயல்குடி அருகே காயங்களுடன் புள்ளிமான் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உடலில் காயங்களுடன் மான் மீட்கப்பட்டு சனிக்கிழமை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செவல்பட்டி கிராமத்தில் வயலில் காயத்துடன் கிடந்த புள்ளி மான்.
செவல்பட்டி கிராமத்தில் வயலில் காயத்துடன் கிடந்த புள்ளி மான்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உடலில் காயங்களுடன் மான் மீட்கப்பட்டு சனிக்கிழமை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாயல்குடி அருகே செவல்பட்டி அருகில் உள்ள வயல் பகுதிக்குள் தண்ணீா் குடிக்க வந்த சுமாா் 2 வயதுள்ள ஆண் புள்ளி மான் உடலில் காயங்களுடன் வயலில் படுத்துக் கிடந்தது. அப்போது அவ்வழியாக வயலுக்கு சென்ற விவசாயிகள், கால்நடை மருத்துவா் ஹரி கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்தனா்.

இதனையடுத்து காயமடைந்த மானுக்கு கால்நடை மருத்துவா் சிகிச்சைஅளித்தாா். பின்னா் சாயல்குடி வனச்சரக அலுவலா் அன்புச்செல்வன் மானை மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com