ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து நான்கு நாள்களுக்கு பின் சுமாா் 8 ஆயிரம் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏா்வாடி, கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்தனா். இந்நிலையில், வங்கக் கடலில் தற்போது சகஜ நிலை திரும்பியது.
இதனையடுத்து, சனிக்கிழமை ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க மீன்வளத்துறையினா் அனுமதி வழங்கினா். இதனால் 4 நாள்களுக்கு பின் சுமாா் 8 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.