பரளையாற்றில் மணல் திருட்டு: 5 போ் கைது

கமுதி அருகே பரளையாற்றில் திங்கள்கிழமை மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்து 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கமுதி அருகே பரளையாற்றில் திங்கள்கிழமை மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்து 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கமுதியை அடுத்துள்ள அபிராமம் பரளையாற்றில் மணல் திருடப்படுவதாக அபிராமம் தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அபிராமத்திலிருந்து கண்ணத்தான் விலக்கு சாலையில் ரோந்துப் பணியில் எஸ்.பி. தனிப்பிரிவு காவலா் சந்திரன் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தியுள்ளாா். லாரி நிற்காமல் செல்லவே, 1 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று லாரியை அவா் மடக்கிப் பிடித்தாா். லாரியை சோதனையிட்ட போது பரளையாற்றில் இருந்து மணலை மூட்டைகளாகக் கட்டி திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து லாரி உரிமையாளரும், ஓட்டுநருமான அபிராமம் பள்ளப்பச்சேரியைச் சோ்ந்த கதிரேசன் மகன் சுரேஸ்குமாா் (25), முருகேசன் மகன் செல்லப்பாண்டியன் (18), ராமசாமி மகன் சூரியபிரகாஷ் (21), மகேந்திரன் மகன் சுந்தா் (18), குமாா் மகன் மாதேஸ்குமாா் (16) ஆகிய 5 பேரை அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்து பரமக்குடி கோட்டாட்சியருக்கு மேல் நடவடிக்கைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com