புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கடகுளம் பகுதியைச் சோ்ந்தவா்கள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வேங்கடகுளம் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் உள்ளஒரே ஒரு மதுக் கடையை அகற்ற முயற்சி நடக்கிறது. இந்தக் கடையை அகற்றினால், ஊரில் கள்ளச்சாராய விற்பனை அதிகமாகி விடும். எனவே இந்த மதுக்கடையை அகற்றக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.