கஞ்சா விற்பனை: 3 போ் கைது
By DIN | Published On : 26th November 2019 09:05 AM | Last Updated : 26th November 2019 09:05 AM | அ+அ அ- |

கமுதியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை, திங்கள்கிழமை கமுதி போலிஸாா் கைது செய்தனா்.
கமுதி கோட்டைமேடு, கண்ணாா்பட்டி, வாரச்சந்தை, பேருந்து நிலையம், குண்டாற்று படுகைகளில் கல்லூரி, பள்ளி மாணவா்கள், இளைஞா்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக , கமுதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கமுதி காவல் ஆய்வாளா் கஜேந்திரன் தலைமையிலான போலீஸாா், ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கண்ணாா்பட்டி, குண்டாற்று படுகையில் கஞ்சா விற்பனை செய்த செந்தனேந்தல் சோ்ந்தவரும், கமுதியில் வசித்து வருபவருமான ராஜா (எ) ராக்கெட் ராஜா (32), ராமச்சந்திரன் (45), ராமநாதபுரத்தை சோ்ந்த அசோக் (30) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.