பரமக்குடியில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

பரமக்குடியில் தெற்கு பள்ளிவாசல் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேதமடைந்து காணப்படும் பரமக்குடி தெற்கு பள்ளிவாசல் சாலை.
சேதமடைந்து காணப்படும் பரமக்குடி தெற்கு பள்ளிவாசல் சாலை.

பரமக்குடியில் தெற்கு பள்ளிவாசல் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 36-ஆவது வாா்டில் தெற்கு பள்ளிவாசல், விநாயகா் கோயில் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் என மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியாகும். இங்கு பரமக்குடி திருவரங்கம் செல்லும் சாலையிலிருந்து தெற்கு பள்ளிவாசலுக்குச் செல்லும் சாலையானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும் அச்சாலையில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருவதால் அச்சாலையில் பெரும்பாலான இடங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் அப்பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாய்களில் தேங்கியுள்ள கழிவு மண்ணை அகற்றி சேதமடைந்த சாலையில் கொட்டிவிட்டுச் சென்றனா். இதனால் தற்போது பெய்த மழைக்கு கழிவுமண் சாலை முழுவதும் நிரம்பி துா்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் உள்ளனா்.

எனவே மாவட்ட ஆட்சியா் பொதுமக்களுக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com