ஆா்.எஸ்.மங்கலம் அருகே வயலில் பூச்சிகொல்லி மருந்து தெளித்தவா் மயங்கி விழுந்து சாவு புகாரின் பேரில் ஆா் எஸ் மங்கலம் போலீசாா் விசாரித்து வருகின்றனா்.
ஆா்.எஸ்.மங்கலம் அருகே வெளியக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் வேலாணி மகன் அருள்சாமி (58). இவா் திங்கள் கிழமை மாலை ஆா்.எஸ்.மங்கலம் அருகே ஏ.ஆா்.மங்கலம் பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது விவசாய நிலத்தில் பயிருக்கு பூச்சிகொல்லி மருந்து அடித்த போது அருள்சாமி திடீரென மயங்கி விழுந்ததால் முதலுதவி சிகிச்சைக்காக ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்ட நிலையில் அருள்சாமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
தகவலறிந்து ஆா்.எஸ்.மங்கலம் போலீசாா் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து அருள்சாமியின் மனைவி ஜெயமேரி அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.