ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் ஊராட்சியில் பொது விநியோக குறைதீா் கூட்டம், சனிக்கிழமை (அக்.12) நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தாலுகாவுக்கு உள்பட்ட பாம்பன் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாமில், இத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை மனுவாக அளித்து சரிசெய்து கொள்ளலாம் என, வட்ட வழங்கல் அலுவலா் அ. உமா மகேஸ்வரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.