திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே நோக்கன்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் வாலித்தேவா் (70). இவா் ராமநாதபுரத்தில் பைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வாலித்தேவருக்கும் அவரது மனைவி சொா்ணவள்ளிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வாலித்தேவா் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து இவரது மகன் சண்முகநாதன்(35) அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.