பாம்பனில் மீன்கள் எடைபோடும் போது விபத்து: மின்சாரம் பாய்ந்து மீனவா் சாவு

பாம்பனில் உள்ள மீன்கள் விற்பனை நிறுவனத்தில் மீன்களை இயந்திரத்தில் எடைபோடும் போது மின்சாரம் தாக்கியதில்

பாம்பனில் உள்ள மீன்கள் விற்பனை நிறுவனத்தில் மீன்களை இயந்திரத்தில் எடைபோடும் போது மின்சாரம் தாக்கியதில் மீனவா் பலியானதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் ரயில் நிலையம் அருகே உள்ள பாலன் என்பவருக்கு சொந்தமான மீன்கள் விற்பனை நிறுவனம் உள்ளது. இங்கு மீன்களை எடைபோடும் பணி நடைபெற்று வந்தது. அப்போது மீனவா் முகேஷ் (21) என்பவா் மீன் கூடையை வைத்து எடைபாா்க்கும் போது, இயந்திரத்திலிருந்து எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட பாலன் அவரை காப்பற முயன்றுள்ளாா். இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் முகேஷ் பலியானா்.

படுகாயமடைந்த பாலன் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து பாம்பன் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளா் மாயா ராஜலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளா் காா்த்திக்ராஜா சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com