ராமநாதபுரம் அருகே பெண் அணிந்த 7 பவுன் நகையை காணவில்லை என போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனர்.
ராமநாதபுரம் அருகேயுள்ள வாலாந்தரவை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அன்னமயில் (65).
இவர் கடந்த 11 ஆம் தேதி (புதன்கிழமை) அதே பகுதியில் உள்ள எஸ்ஓசி நிறுவனம் அருகே மாரியம்மன் கோயில் பகுதிக்கு சென்றார். இந்நிலையில், அவர் அணிந்திருந்த 7 பவுன்
தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம்.
இதுகுறித்து அவர் கேணிக்கரை போலீஸில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திவருகின்றனர்.