ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயி மர்மச்சாவு

ஆர்.எஸ். மங்கலத்தில் திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்த விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

ஆர்.எஸ். மங்கலத்தில் திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்த விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
ஆர்.எஸ்.மங்கலம் காந்தி வீதியில் வசிந்து வந்தவர் நாரயணன் (48). விவசாய கூலி வேலை பார்த்து வந்த இவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வந்துள்ளார். 
இந்நிலையில்,  வியாழக்கிழமை காலையில் நாராயணன் வீட்டில் இறந்து கிடப்பதாக  
அருகே வசிக்கும் லட்சுமி என்பவர் நாரயணனின் சகோதரர் கோபிநாத் (45) என்பவரிடம் கூறியுள்ளார். 
இதையடுத்து, நாராயணன் சாவில் சேந்தேகம் இருப்பதாக ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் கோபிநாத் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com