பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

கமுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தவறி விழுந்த பெண் வெள்ளிக்கிழமை பலியானார்.

கமுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தவறி விழுந்த பெண் வெள்ளிக்கிழமை பலியானார்.
கமுதி அருகே எழுவனூரை சேர்ந்த ஏகராசு மனைவி வைஜெயந்தி (60). இவர் வெள்ளிக்கிழமை எழுவனுôர் அருகே தனது கணவர் ஏகராசுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்திலிருந்து வைஜெயந்தி தவறி விழுந்து, பலத்த காயமடைந்தார். 
காயமடைந்த அவரை மீட்டு, கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் வைஜெயந்தி உயிரிழந்தார்.  இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com