முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில் பேரிடர் மேலாண்மை சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு முதுகுளத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயை தடுப்பது குறித்தும், தீப்பற்றினால் தன்னையும் மற்றவர்களையும் பாதுகாத்து கொள்வது பற்றியும், விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி பணிகள் குறித்தும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை எப்படி மீட்பது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மங்களநாதன் வரவேற்றார்.
இதில், தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் அருள்தாஸ், உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், அலுவலர்கள் ரெத்தினவேல், சண்முக வள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .