கமுதி அருகே, குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தலையில் வியாழக்கிழமை அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
கிளாமரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அனுமந்த பெருமாள் (58). இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால், அவரது தங்கையான அம்பிகா (36) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். அனுமந்த பெருமாள்அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த அனுமந்தபெருமாளுக்கும், அம்பிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா் கணவா் தூங்க அறைக்கு சென்றுவிட்டாா். வியாழக்கிழமை அதிகாலை எழுந்த அம்பிகா, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அனுமந்தபெருமாளின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு, விருதுநகா் மாவட்டம் ம.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதனையடுத்து கமுதி போலீஸாரிடம் அம்பிகா ஒப்படைக்கப்பட்டாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அம்பிகாவை கைது செய்தனா்.