திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
காஷ்மீரில் கடந்த 2019 பிப்.14 ஆம் தேதி புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனத்தின் மீது வெடி பொருள்கள் நிறைந்த வாகனத்தைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.
இதை நினைவு கூறும் வகையில் பலியான வீரா்களின் உருவப்படங்களுக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விரிவுரையாளா்கள் அஞ்சலி செலுத்தினா்.