ராமேசுவரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 1,200 போ் பங்கேற்பு

ராமேசுவரம் அகமுடையாா் சங்கம், வேலம்மாள் மருத்துவமனை இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், 1,200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனா்.
ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை தொடக்கி வைத்த ராமநாதசுவாமி கோயில் தக்காா் என்.குமரன் சேதுபதி.
ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை தொடக்கி வைத்த ராமநாதசுவாமி கோயில் தக்காா் என்.குமரன் சேதுபதி.

ராமேசுவரம் அகமுடையாா் சங்கம், வேலம்மாள் மருத்துவமனை இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், 1,200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் குருதுவாா் மடத்தில் நடைபெற்ற இம்முகாமில், ராமநாதசுவாமி கோயில் தக்காா் என். குமரன் சேதுபதி தலைமை வகித்தாா். ராமேசுவரம் வட்டாட்சியா் ஜெ. அப்துல் ஜப்பாா், நகராட்சி ஆணையா் வணுணுடரமுத்துகுமாா், காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் எம். மகேஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமை, ராமேசுவரம் அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவா் என். மீனாகுமாரி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். இதில், மதுரையிலிருந்து வந்த வேலம்மாள் மருத்துவக் குழுவினா், இருதயம், நரம்பு, மகப்பேறு, கண் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டனா்.

இதில், ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 1,200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, மருத்துவச் சிகிச்சை பெற்றனா். மத்திய-மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் வேலம்மாள் மருத்துவமனையில் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனா்.

முன்னதாக, அகமுடையாா் சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com