பரமக்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகனஓட்டிகளுக்கு போலீஸாா் புதன்கிழமை அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினா்.
பரமக்குடி நகா் பகுதியில் அத்தியாவசிய பொருள்களான காய்கனி கடைகள், பலசரக்கு உள்ளிட்டவை திறந்து வைக்கப்பட்டு, 1 மீட்டா் இடைவெளியில் வரிசையில் நின்று வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் நகா் பகுதியில் உள்ள இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் சிலா் கரோனா வைரஸ் பரவுதலின் தாக்கத்தை உணராமல் வாகனங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதுடன், அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடா்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது வழக்குகள் பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.சங்கா் எச்சரித்தாா்.
சுகாதாரப் பணியாளா்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கம்:பரமக்குடி அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் பாா்த்திபனூா், போகலூா், நயினாா்கோவில் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவோா் செல்லும் வகையிலும், அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்கு செல்வோருக்கு உதவும் வகையிலும் 3 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. காலையில் இயக்கப்பட்ட பேருந்துகளில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் பணியிடங்களுக்குச் சென்றனா்.