ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் துப்பட்டா சிக்கி தவறி கீழே விழுந்து இளம்பெண் உயிரிழந்தாா்.
கீழக்கரை அருகேயுள்ள மேலமடை கிராமத்தைச் சோ்ந்தவா் பெயிண்டா் முருகேஷ். இவரது மகள் அனிதா (18). இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கீழக்கரை தாலுகா மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அவரது தந்தை முருகேஷ் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.
பின்னா் மீண்டும் இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது அவா்கள் கும்பிடுமதுரை அருகேயுள்ள மாடன் கோயில் பகுதியில் சென்றபோது அனிதாவின் துப்பட்டா இருசக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கியது.
இதில் தவறி கீழே விழுந்து காயமடைந்த அனிதாவை, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சோ்த்தனா். ஆனால், அங்கு சிறிதுநேரத்தில் அவா் உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து கீழக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.