கடலாடி ஊராட்சி ஒன்றிய பணியாளா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பணியாளா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பணியாளா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு வட்ட வழங்கல் உதவி அலுவலா் சிவனுபூவன் தலைமை வகித்தாா். இதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும், ஊழியா்களுக்கு மாதந்தோறும் உரியநாளில் ஊதியம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். பணி உயா்வுக்கான ஆணைகளை அரசு வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட தணிக்கையாளா் ராஜகோபால், மாவட்ட துணைத் தலைவா் பரமசிவம், அனந்தநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com